NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** திருச்சி மேற்கு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு புத்தூர் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சி மேற்கு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு புத்தூர் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு



திருச்சிராப்பள்ளி,ஏப், 11,


திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், கழக முதன்மை செயலாளர்,அமைச்சர் கே.என்.நேரு மேற்கு தொகுதிக்குட்பட்ட புத்தூர் அக்ரஹாரம் தெரு , புத்தூர் மந்தை, வடக்கு முத்துராஜா தெரு , அகமது காலனி, ஞானம் காலனி, புத்தூர் புது தெரு , ராமலிங்க நகர் , கனரா பேங்க் காலனி, சீனிவாச நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு தீவிர வாக்கு சேகரிபப்பில் ஈடுபட்டார்.




அப்போது பொதுமக்கள் வழி நெடுகிலும் திரண்டு வந்து மலர் தூவி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தின் போது அமைச்சர் கே.என்.நேரு தமிழக அரசின் சாதனைகளையும், தொகுதிக்கு செய்யப்பட்டுள்ள திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, நமது பகுதியின் வளர்ச்சி தொடரவும், மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றி கிடைக்கவும் வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரும் வெற்றியை தேடித்தர வேண்டும் என அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.


Post a Comment

0 Comments