திருச்சி பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா சகாய மாதா சர்ச் 146ஆவது பங்கு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனியை முன்னிட்டு அன்னதானம்- அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்
திருச்சி பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா சகாய மாதா சர்ச் 146 ஆவது பங்கு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நிகழ்ச்சியை தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், பேரவை துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் பொன்னர், மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட மகளிர் அணி செயலாளர் வனிதா, மாவட்ட பொருளாளர் மார்க்கெட் கே டி. தங்கராஜ், கவுன்சிலர் அம்பிகாபதி, பேரவை துணை செயலாளர் சுரேஷ்குமார்,
பகுதி செயலாளர்கள் சுரேஷ் குப்தா, இலியாஸ், வசந்தம் செல்வமணி, கலீல் ரகுமான், விஎஸ்பி மகாதேவன், உரந்தை முத்தையா, மோகன், எடத்தெரு பாபு, கமலஹாசன், முத்துக்குமார், செல்லப்பா, பொதுக்குழு உறுப்பினர் அப்பாக்குட்டி, மாணவரணி செயலாளர் பால மோகன் ராஜ், வாழைக்காய் மண்டி சுரேஷ், மலைக்கோட்டை சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments