திருச்சி ஜூலை 22-
திருச்சி அரியமங்கலம் சீனிவாச நகர் பொதுக்கழிப்பிடம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடியாக ரோந்து சென்று கண்காணித்தனர் .அப்போது லாட்டரி சீட்டுகள் விற்றதாக அரியமங்கலம் சீனிவாசன் நகரை சேர்ந்த சக்திவேல் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

0 Comments