திருச்சி பெரிய கடை வீதி வெள்ளை வெத்தலகார தெரு முனீஸ்வரன் கோவில் பின்புறம் தனியார் வீட்டில் சுற்றி குடியிருக்கும் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் டவர் அமைக்க முழு வீச்சில் ஏற்பாடு .
ட்ராய் அமைப்பு சட்டப்படி ஒரு டவர் அமைப்பதற்கு டவர் இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து மீட்டர் தொலைவு இடம் வேண்டும் அப்படி இடம் இருந்தால் தான் அலை வீச்சு சுற்றியுள்ள உயிரினங்களையோ மனிதர்களை பாதிக்காது இந்த சட்ட விதி அமைப்பு கூட பின்பற்றாமல் ஏர்டெல் டவர் நிறுவனம் விதி மீறலாக டவர் அமைத்துள்ளது .
இது சம்பந்தமாக தவறு இருக்கும் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரரும் சுற்றி குடியிருக்கும் பொதுமக்களும் காவல்துறை இடமும் மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக முதலமைச்சர் தனிப் பிரிவில் புகார் மனுவும் அனுப்பி உள்ளனர் . ஆனால் மேற்படி தனியார் ஏர்டெல் நிறுவனம் எந்த புகாரையும் கண்டுகொள்ளாமல் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள் என பொதுமக்கள் வேதனையுடன் பேட்டியளித்தனர்
திருச்சி மாவட்ட ஆட்சியரும் , திருச்சி மாநகராட்சியும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் குமுறல்!!!

0 Comments