திருச்சி மாவட்ட சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் CEATRON-2025 என்னும் தலைப்பில், மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் மாநகராட்சி மண்டல தலைவர் துர்கா தேவி மற்றும் சங்கத்தின் செயலாளர் சுந்தரேசன், தலைவர் சுரேஷ்குமார், பொருளாளர் தினகரன் உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பொறியாளர்களுக்கு கவுன்சில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மேயர் அன்பழகனிடம் முன்வைத்தனர்

0 Comments